அச்சுறுத்தும் வகையில் லாரி ஓட்டியவர் கைது

அச்சுறுத்தும் வகையில் லாரி ஓட்டியவர் கைது

1 mins read

தெம்ப­னிஸ் விரை­வுச்­சாலை­யில் கடந்த வியாழக்­ கிழமை காலையில் லாரியின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு தடங்களில் சறுக்கியபடி ஓட்டிய 24 வயது ஓட்டுநர் கைதானார். இந்தச் சாலை விபத்­தில் ஒரு லாரியும் சிறிய பேருந்தும் சம்பந் தப்­பட்­டிருந்தன. இந்தச் சம்ப­வம் ஒரு காருக்குள் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது. அது சிங்கப்­பூர் டாக்சி ஓட்­டு­நர் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பகிர்ந்­து ­கொள்ளப்பட்டது. அந்த லாரி வலது தடத்­தி­லி­ருந்து திசை மாறி தடம் புரண்டு சறுக்கி ஒருவழியாக விரை­வுச்­சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தபடி நின்றது. படம்: ஃபேஸ்புக் காணொளி