சிங்கப்பூரின் சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவது அவசியம் என்றும் சிங்கப் பூருக்குக் குடியேறும் சீனர்கள் சிங்கப்பூரில் பிறந்த சீனர்களுடனும் மற்ற இனத்தவர் களுடனும் ஒருங்கிணைவது அவசியம் என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். புதிய சிங்கப்பூர் குடிமக்கள் மன்றமும், சீனாவிலுள்ள பற்பல நகரங்கள் உட்பட சுமார் 75 நாடுகளிலுள்ள வெளிநாட்டுச் சீனர் சங்கங்களும் கூட்டாக அமைத்திருக்கும் உலகளாவிய சமூகக் கட்டமைப்பு நேற்றிரவு செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் உல்லாசத்தளத்தில் அதிகார பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளருமான சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சான்: சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவது அவசியம்
1 mins read

