தெம்பனிஸ் வீடமைப்பு வளர்ச் சிக் கழக புளோக் ஒன்றில் பெயர்ந்து விழுந்த நிழல்மாடம், பக்கவாட்டில் இரும்பு கொடுத்து உறுதிப்படுத்தப்படாமல் இருந்த தால்தான் சரிந்து சாய்ந்து விட்டது என்று கட்டட, கட்டு மான ஆணையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 23ல் இருக்கும் அந்த புளோக் 201ஈ=-ல் உள்ள இதர நிழல் மாடங்களும் அங்குள்ள மற்ற புளோக்குகளின் மாடங் களும் உறுதியாக, பாதுகாப் பானவையாக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. நிபுணத்துவப் பொறியாளர் ஒருவர் நடத்திய பரிசோதனை களை அடுத்து இது தெரிய வந்துள்ளது.
வீவக நிழல் மாடங்கள் பாதுகாப்பு உறுதி
1 mins read
-

