சிங்கப்பூர், மலேசியா முயற்சி: 30 கிலோ ஹெராயின் சிக்கியது

சிங்கப்பூர், மலேசியா முயற்சி: 30 கிலோ ஹெராயின் சிக்கியது

1 mins read

சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் மலேசியா வின் போதைப்பொருள் குற்றச் செயல் புலன்விசாரணைத் துறை யும் ஒத்துழைத்துச் செயல்பட்ட தன் காரணமாக போதைப் பொருள் வழங்கீட்டாளர் ஒருவர் கைதாகி இருக்கிறார். அந்த நபர் சிங்கப்பூருக்குள் அதிக அளவு ஹெராயின் போதைப்பொருளைக் கொண்டு வருவதில் சம்பந்தப்பட்டு இருக் கிறார் என்று நம்பப்படுகிறது. சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று இவ்விவரங்களைத் தெரிவித்தது. இருநாடுகளின் அமைப்புகளும் வெற்றிகரமான முறையில் மேற் கொண்ட நடவடிக்கை காரணமாக 30 வயது மலேசியர் கைதானார்.