சிங்கப்பூர்- இந்திய உறவைப் பேணி வலுப்படுத்த இலக்கு

சிங்கப்பூர்- இந்திய உறவைப் பேணி வலுப்படுத்த இலக்கு

1 mins read
d2c90c1a-50b9-48ae-98af-67a7175e60ae
-

பேட்ரிக் ஜோனஸ்

புதிய இந்தியத் தூதர் சிங்கப் பூருக்கும் இந்தியாவுக்கும் இடை யிலான வலுவான உறவை மேன் மேலும் வளர்த்து, இங்குள்ள இந்தியச் சமூகத்தின் பலங்களைச் சாதகமாக்க விரும்புகிறார். சிங்கப்பூரிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தின் (IIM) முன்னாள் மாணவர் சங்கத் தில் புதிதாக ஓர் உறுப்பினர் சேர்ந் திருக்கிறார். அவர்தான் சிங்கப் பூருக்கான புதிய இந்தியத் தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப், 53. நவம்பர் 23ஆம் தேதி அதிபர் டோனி டான் கெங் யாமிடம் தமது சான்றாவணங்களை ஒப்படைத்த திரு அஷ்ரஃப், இந்திய மேலாண் மைக் கல்வி நிலையத்தின் (அகமதாபாத்) முன்னாள் மாணவர்.

சிங்கப்பூருக்கு வந்து கொஞ்ச காலத்திற்குள், தமது சக மாண வர்களில் 12 பேரை அவர் சந்தித்துவிட்டார். திரு அஷ்ரஃபை அவரது அலு வலகத்தில் சந்தித்தபோது பல்வேறு விவகாரங்கள் பற்றிப் பேசினார்.