சிங்டெல் கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை இணைய சேவைகள் நேற்றுக் காலை 8.25 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. வாடிக்கையாளர்களுக்கான இம்மாத இணையப் பயனீட்டுக் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், கையடக்கச் சாதனங்களில் சிங்டெல் சேவைகளைப் பயன்படுத்துவோர் கடந்த சனி, ஞாயிறு என இரு நாட்களுக்கான இணையப் பயனீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டியதில்லை என்று சிங்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவர் யுவென் குவான் மூன் தெரிவித்தார்.
வழக்கநிலையில் சிங்டெல் இணைய சேவை; 10% கட்டணம் தள்ளுபடி
1 mins read
-

