உலகளாவிய அளவில் பொருளி யல் சரியில்லை. இதன் விளைவு களை சிங்கப்பூர் அனுபவிக்கிறது. இருந்தாலும் சிங்கப்பூர் அரசாங்கம் புதிய வேலைகளை உருவாக்கி இருக்கிறது. வேலையின்மை விகிதத்தைக் குறைவாகவே வைத்திருக்கிறது. வீடு, மருத்துவம் போன்றவற்றுக்கு மக்களுக்கு ஆகும் செலவைக் கட்டுப்படியாகக்கூடிய அளவி லேயே அது வைத்திருக்கிறது. இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் சாதித் துள்ள முக்கியமான சாதனைகளில் அடங்கும் என்று நிதி அமைச்சு வெளியிட்டு இருக்கும் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. 'சிங்கப்பூர் அரசாங்கத் துறை அடைவுநிலை மறுபரிசீ லனை' என்ற ஓர் அறிக் கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெளியிடப்படும்.
பலவீனமான பொருளியல் சூழலிலும் அரசு சாதனை
1 mins read

