மலேசியாவின் அரசாங்க நிதி அமைப்பான 1எம்டிபி பற்றி சிங் கப்பூர் நடத்தி வரும் புலன் விசாரணை தொடர்பில் ஃபால்கன் பிரைவேட் பேங்க் சிங்கப்பூர் கிளையின் முன்னாள் நிர்வாகி யான ஜென்ஸ் ஸ்டுர்செநெக்கர் என்ற சுவிட்சர்லாந்து நாட்டவர் மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு இருக்கின்றன. அவர் இம்மாதம் 11ஆம் தேதி இந்தக் குற்றச்சாட்டுகள் சிலவற் றின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு $80,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக் கிறது. 1எம்டிபி நிதித் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பணத் தில்லுமுல்லுகள், ஊழல் கள் பற்றி உலகம் முழுவதும் புலன்விசாரணைகள் நடக்கின் றன. சிங்கப்பூர் அதிகாரிகள் நடத்தும் புலன்விசாரணை தொடர்பில் இதுவரையில் ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
16 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கும் சுவிட்சர்லாந்து நாட்டவர் ஜென்ஸ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்