வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்து திருட முயன்று இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் 47 வயது ஆடவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. வெஸ்ட் கோஸ்ட் கிரசெண்டில் இருக்கும் ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் திருட்டுச் செயலில் ஈடுபடுவதாகத் தெரி கிறது என்று இந்த மாதம் 6ஆம் தேதி நண்பகல் 12.14 மணிக்கு போலிசுக்கு தகவல் வந்தது. திருடுவது தெரியவந்ததையடுத்து அந்த ஆடவர் தப்பி ஓடிவிட்டார். அதனையடுத்து கிளமெண்டி பிரிவு போலிசார் பலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். புலன்விசாரணையும் நடந்தது. சந்தேகப்பேர்வழி அடையாளம் காணப்பட்டார். அதே நாளன்று பிற்பகல் சுமார் 3.15 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் கிரசெண்டில் ஆடவர் கைதானார். புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. திருடுவதற்காக அத்துமீறி நுழைவோருக்கு ஏழு ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
சந்தேக ஆடவர் கைது
8 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jan 2017 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!