பிப்ரவரி 9ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவில் காவடி எடுப்பவர் களுக்காகவும் அவர்களின் பிரதிநிதிகளுக்காகவும் இரண்டு சிறப்புக் கூட்டங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதி திங் கட்கிழமை, 17ஆம் தேதி செவ் வாய்க்கிழமை ஆகிய இரு நாட் களில் ஏதாவது ஒரு நாளில் இரவு 7.30 மணிக்கு சிராங்கூன் ரோடு பிஜிபி அரங்கில் நடை பெறும் கூட்டத்தில் பங்கேற்க காவடி எடுப்பவர்களும் அவர்க ளின் பிரதிநிதிகளும் அழைக்கப் படுகின்றனர்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தற்போது மறுசீரமைப் புப் பணிகள் நடைபெற்று வருவ தால், தைப்பூசத் திருவிழாவின் போது அக்கோயிலுக்குள் செல் லும் வழிகள் கட்டுப்படுத்தப்படும். "தைப்பூசம் 2017 தொடர்பி லான ஏற்பாடுகள் பற்றி, குறிப் பாக காவடிகளை ஏற்றி, இறக்கு தல், காவடிகளைக் கோயிலுக்குள் கொண்டு வரும் நேரம், அங்கி ருந்து புறப்படும் நேரம் உட்பட காவடி எடுப்பவர்களும் அவர்க ளின் பிரதிநிதிகளும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் அவ சியமானது.