வேலைக்கு விண்ணப்பிப்பவர் களையும் பதவி உயர்வுக்குத் தகு தியானர்களையும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பார்ப் பதை விடுத்து அவர்கள் பெற்றி ருக்கும் திறன்கள் அடிப்படையி லும் அவர்களைப் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தையும் முதலாளிகளை யும் தொழிலாளர் இயக்கம் (என்டி யுசி) கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தொழிலாளர் சட்டத் தின்படி, பகுதிநேரப் பணியாளர்க ளுக்குக் கூடுதல் வேலைப் பாது காப்பு அளித்திடவும் என்டியுசி பரிந்துரைத்தது.
அடுத்த மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்படவிருக்கும் வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பிலான தனது பரிந்துரைகளை என்டியுசி கடந்த மாதம் நிதி அமைச்சிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகள் கிடைக் கும் வாய்ப்புகளில் வேலை செய் வோர் விரைவாக மாறிக் கொள்வ தற்கும் சவால்மிக்க பொருளியல் சூழ்நிலையில் அந்த வேலைகளில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்கவும் உதவ என்டியுசி நோக் கம் கொண்டுள்ளது.
ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அவர்களுக்குப் போதிய அளவில் பயிற்சித் திட்டங்கள் தேவை என்று என்டியுசி தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்