ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் காணாமல் போன எஸ்ஐஏ நிறுவன ஊழியரான சிங்கப்பூரர் நோர்சாஃபிஃ நோர்மான், 23 நேற்று கண்டு பிடிக்கப்பட்டார். விமானப் பணியாளரான திரு நோர்சாஃபிஃ கடந்த செவ்வாய்க் கிழமை இரவு பிரிஸ்பனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறாததால் அவர் காணவில்லை என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குவீன்லாந்து மாநில போலிசார் அவரைத் தேடும் பணியில் இறங்கியது. திரு நோர்சாஃபிஃ பிரிஸ்பன் நகர போலிசாரால் நேற்று கண்டு பிடிக்கப்பட்டார் என்றும் அவருக்கும் அவரது குடும்பத் துக்கும் ஆதரவும் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது என எஸ்ஐஏ விமான நிறுவனத்தின் பேச்சாளர் நேற்று கூறினார்.
காணாமல் போன எஸ்ஐஏ ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்
1 mins read

