தீவின் பல பகுதிகளில் நேற்று பிற்பகல் கனமழை பெய்தது. அதில் அப்பர் தாம்சன் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அப்பகுதியில் ஒரு சாலையில் கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டதால் போக்குவரத்து நிலைமை மேலும் மோசமானது. ஜாலான் பெலடினாவுக்குப் பிறகு சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் சாலைகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
அப்பர் தாம்சன் சாலையிலும் பல்வேறு சாலைகளிலும் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்கள். படம்: ஃபேஸ்புக்