சாலைப் போக்குவரத்து நிலை மையை மேம்படுத்த இன்னும் அதி கம் செய்யப்படலாம் என்றும் அதற்கு சிங்கப்பூர் வாகன உரிமை யாளர் சங்கம் போன்ற பங்கா ளிகளின் ஆதரவு தேவை என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். குங் சோங் ரோட்டில் சிங்கப்பூர் வாகன உரிமையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர், "2016ன் முதல் மூன்று காலாண்டுகளில் சராசரியாக மாதத்துக்கு 11 உயிர்க் கொல்லி விபத்துகள் நிகழ்ந்தன. "இந்த நிலைமை 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று மேம் பட்டது என்றாலும் ஒவ்வொரு உயிர்க்கொல்லி விபத்தும் தவிர்க் கப்படக்கூடியது. மேலும் ஒவ் வொரு மாதத்திலும் காயங்கள் விளைவிக்கும் 700க்குச் சற்றுக் குறைவான சாலை விபத்துகள் நிகழ்கின்றன," என்றார்.
சாலை போக்குவரத்து சட்டம் மறுஆய்வு
1 mins read

