கனரக லாரி ஓட்டுநர் ஒருவர் ஒரு சைக்கிளோட்டி மீது மோதி அந்தச் சைக்கிளோட்டியை 11.5 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டார். வழியில் வந்த ஒருவர் சத்தம் போட்டதை அடுத்து அந்த ஆடவர் தன் வாகனத்தை நிறுத்தினார். சுவா கெங் ஹோங், 59, என்ற அந்த வாகன ஓட்டிக்கு நேற்று ஏழு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. யீஷூன் தொழிற்பேட்டை ஏ, கேன்பெரா லிங்க் சாலைச் சந்திப்பில் 2015 டிசம்பர் 25ஆம் தேதி அலட்சியமாக வாகனத்தை ஓட்டி, அதன் மூலம் திருவாட்டி ஃபதிஜா கனி, 60, என்ற மாதுக்கு மரணத்தை விளைவித்த குற்றத்தை சுவா ஒப்புக்கொண்டார்.
சைக்கிளில் சென்ற மாதுக்கு மரணம்; வாகன ஓட்டிக்குச் சிறை, தடை
1 mins read

