உபி வட்டாரத்தில் கடந்த வாரம் ஒரு பூனை காகித ஒட்டு வில்லையைக் கொண்டு இறுக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோன்ற விலங்கு வதை இப்போதுதான் முதன் முதலில் நடந்துள்ளது. காகித ஒட்டுவில்லையால் பூனை சுற்றப்பட்டிருந்த புகைப் படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. இதை கவனத்துக்குக் கொண்டு வந்தது 'யீஷூன் 326 டெபி கேட்' எனும் பூனை ஆர்வலர் குழு. இந்தப் பூனை மவுண்ட் பிளசெண்ட் விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதன் உடலிலிருந்த காகித ஒட்டு வில்லை அகற்றப்பட்டது என்றும் அக்குழு தெரிவித்தது.
சிங்கப்பூரில் மீண்டும் பூனை வதை
1 mins read

