கிழக்கு-மேற்கு எம்ஆர்டி தடத்தில் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பயணிகள் சில நிலையங் களில் பெரும் கூட்ட நெரிச லில் சிக்கித் தவித்தனர். நிரம்பி வழிந்த இரண்டு ரயில்கள், தாம் காத்திருந்த நிலையத்தில் நிற்காமல் போனதாக ஒருவர் குறிப் பிட்டார். அவசரமாக ஜூ கூன் பகுதியில் பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற்பகல் தெரிவித்திருந்தது. மாலை வேளையிலும் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என அது குறிப்பிட்டிருந்தது. பலர் வீடு திரும்ப பேருந்துச் சேவைகளை நாடினர்.
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த எம்ஆர்டி பயணிகள்
1 mins read

