புத்தாக்கம், தேர்ச்சி, ஆற்றல் மேம்படட்டும்

புத்தாக்கம், தேர்ச்சி, ஆற்றல் மேம்படட்டும்

1 mins read
2e6e867c-3505-4ead-a3b6-b2805f54fd99
-

வேகமாக மாறிவரும் உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூர் வருங்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சிகண்டு, சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை, நல்ல வாழ்க்கைச் சூழலை, வாழ்க்தைத் தரத்தை நிலை நாட்டிவர என்னென்ன செய்ய வேண்டும் என்பனவற்றை வரையறுக்க சென்ற ஆண்டு ஜனவரியில் 30 பேரைக்கொண்ட 'வருங்கால பொருளியல் குழு' என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், வர்த்தக, தொழில் (தொழில்) அமைச் சர் எஸ் ஈஸ்வரன் ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட அந்தக் குழு, கடந்த ஓராண்டு காலமாக வர்த்தகச் சங்கங்கள், அரசு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், நிறுவனங் கள், கல்வித்துறையினர், மாணவர் கள் உள்ளிட்ட 9,000 பேருடன் கலந்து ஆலோசித்து 109 பக்கங்களைக்கொண்ட ஓர் அறிக்கையை நேற்று வெளியிட்டது. ஏழு உத்திகளை குழு தன் அறிக்கையில் பரிந்துரைகளாகக் குறிப்பிட்டுள்ளது. பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.