வருங்கால பொருளியல் குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதையடுத்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதை எளிதாக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் திட்டங்களை நேற்று அறிவித்தது. அடுத்த தலைமுறை ஆசிய நிறுவனங்கள் கடன் பெறும் வழிமுறைகளை வலுப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க திடமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நிர்மாணிக்க இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. வலுவான வளர்ச்சி சாத்தியம் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளித்து அவை அனைத்துலக ரீதியில் செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வருங்கால பொருளியல் குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறும் வழிமுறைகள் எளிதாகும்
1 mins read

