சிங்கப்பூரில் அண்மையில் இரு மரங்கள் விழுந்த சம்பவங்களில் ஒருவர் மாண்டார். பலரும் காயம் அடைந்தார்கள். இந்தச் சம்பவத் தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் மரங்கள் எவ்வாறு பரிசோதிக்கப் படுகின்றன என்பதை தேசிய பூங்காக் கழகம் விளக்கியது. கணிக்க முடியாத, கடுமை யான பருவநிலை நிலவுவதைக் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ப காலப்போக்கில் பூங்காக் கழகம் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. பூங்காக் கழகம் பரவலான மரங்கள் பராமரிப்புச் செயல்திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருகிறது. கீழே விழுந்துவிடக்கூடிய அல் லது முறிந்துவிடக்கூடிய மரங் களை இந்தச் செயல்திட்டம் அடையாளம் காண்கிறது.
மரங்களைக் கண்காணிக்கும் முறைகள் பற்றி தேசிய பூங்கா வாரியம் விளக்கம்
1 mins read

