'இதர அம்சங்கள் கவர்ந்தாலும் தண்ணீர் விவகாரம் கவலையளிக்கிறது'

'இதர அம்சங்கள் கவர்ந்தாலும் தண்ணீர் விவகாரம் கவலையளிக்கிறது'

1 mins read

வில்சன் சைலஸ்

அதிகரிக்கவுள்ள தண்ணீர் கட்ட ணம், முதல் முறையாக மறு விற் பனை வீடு வாங்க விரும்புவோருக் குக் கூடுதல் மானியம், மேற்படிப் புக்குக் கூடுதல் நிதி உதவி, மோட்டார்சைக்கிள்களுக்கு மூன் றடுக்கு முறையாக மாறும் கூடுதல் பதிவுக் கட்டணம். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இவ் வாண்டுக்கான வரவுசெலவுத் திட் டத்தில் சிங்கப்பூரர்களை வெகு வாகப் பாதித்த விவகாரங்கள் இவை. ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தைப் பெரும்பான்மையினர் வரவேற்றாலும் தண்ணீர் கட்டணத் தின் அதிகரிப்பு பலரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கொண்ட திருமதி ஜெனட், "சிக் கனமாகத் தண்ணீரைப் பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் இத்தகைய உத்தியைக் கையாண்டுள்ளது புரி கிறது. ஆனால், எங்களைப் போன்ற பெரிய குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு இயல்பாகவே அதிகம்," என்றார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg