அமைச்சர் இந்திராணி ராஜா: தண்ணீர் கட்டண உயர்வு அவசியமான நடவடிக்கை

அமைச்சர் இந்திராணி ராஜா: தண்ணீர் கட்டண உயர்வு அவசியமான நடவடிக்கை

1 mins read

எதிர்காலத்தில் நமக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டே அதன் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மேலும் இது அவசியமானது என்று நிதி, சட்ட மூத்த துணை அமைச் சர் இந்திராணி ராஜா தெரிவித் துள்ளார். மீடியாகார்ப் 93.8 வானொலிக்கு நேற்று பேட்டியளித்த குமாரி இந்தி ராணி, பொருளியல் மேம்பட்டவு டன் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தியிருக்கலாமே என்று கேட் கப்பட்டதற்கு, "இந்த ஆண்டு கட் டண உயர்வை அமல்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு பொருளியல் எப் படி இருக்கும் என்று சொல்ல முடி யாது," என்று பதிலளித்தார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg