ஷுன்ஃபூ ரோட்டில் இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடிய சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. ஷுன்ஃபூ ரோட்டில் குப்பை சேகரிக்கும் இடம் ஒன்றில் கன்னமிடப்பட்டதாக 2017 பிப்ரவரி 3ஆம் தேதி போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்த பணத்தையும் செல்பேசியையும் காணவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டது. இதனையடுத்து தங்ளின் பிரிவு போலிஸ் அதிகாரிகள் புலன்விசாரணையைத் தொடங்கினார்கள். சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டு 2017 பிப்ரவரி 21ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.50 மணிக்கு அந்த நபரை கேலாங் ரோட்டில் அதிகாரிகள் கைது செய்தார்கள்.
கன்னமிட்டு திருட்டு; சந்தேகநபர் கைது
1 mins read

