ஷெண்டன் ஹவுஸ் கட்டடத்தில் நேற்று பிற்பகலில் தீப்பற்றி யதைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட் டனர். 3 ஷெண்டன் வே முகவரியில் உள்ள அக்கட்டடத்தில் தீப்பிடித்தது பற்றி தங்களுக்கு பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் கட்டடத்தின் 15வது தளத்தில் உள்ள பொருட்கள் இதில் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்தத் தளம் முழுவதும் கடுமையான புகையால் சூழப்பட்டு இருந்த தாகவும் அது குறிப்பிட்டது. தீ விரைவாக அணைக்கப்பட்டுவிட்டபோதிலும் புகை சுவாசித்தன் காரணமாக ஓர் இளம்பெண்ணும் 50 வயது களிலுள்ள மற்றொரு பெண்ணும் சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஷெண்டன் ஹவுஸ் கட்டடத்தில் தீ
1 mins read

