முரளி பிள்ளை: சிறிய, நடுத்தர வர்த்தகங்கள்

முரளி பிள்ளை: சிறிய, நடுத்தர வர்த்தகங்கள்

1 mins read
fadb75b7-a71b-4bce-9368-bdb037f0a8ba
-

எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக நிதி தட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்தார் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பேசிய திரு முரளி, பெரிய நிறுவனங்கள் தங் களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் பட்டு வாடா செய்யாமல் காலம் தாழ்த்து வதால் சில சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன என்றார். ஒரு பக்கம் பெரிய நிறுவனங் களுடன் தங்களுக்கு இருக்கும் உறவுக்குப் பங்கம் வரக்கூடாது என சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எண்ணினாலும் சில சமயம் குறிப்பாக பொருளியல் மந்த நிலையின்போது தாமதமாக பணம் பட்டுவாடா செய்யப் படுவதால் பண நெருக்கடி ஏற் பட்டு அது மேலும் பல சிக்கல் களைக் கொடுக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.