பலதுறைத் தொழிற்கல்லூரிகள் தொழில்நுட்பக் கல்விக் கழ கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் 'இயர்ன் அண்ட் லேர்ன்' எனும் வேலை, கல்வி திட்டத்தில் பங்கேற்றனர். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு 400 மாணவர்கள் பங்கேற்பர் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையைக் கடந்து பல மாணவர்கள் திட்டத்தில் பங்கேற்ற னர் என்று கல்வி அமைச்சின் நாடாளுமனற செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
500 மாணவர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை, கல்வித் திட்டத்தால் பயனடைந்தனர்
1 mins read

