அதே வேலையில் அதே தரநிலை யில் மறுபடியும் நியமிக்கப்படும் முதிய அரசாங்க ஊழியர்களுக்கு இனிமேல் சம்பளக் குறைப்பு இருக் காது என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். அத்தகைய அதிகாரிகள் தாங்கள் கடைசியாகப் பெற்ற சம் பளத்தையே தொடர்ந்து பெறலாம் என்று அரசாங்கச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டியோ கூறினார். முதிய ஊழியர்களின் சேவைகளையும் அனுபவங்களையும் அரசாங்கம் அங்கீகரித்துப் பாராட்டுகிறது என் றார் அவர். சிங்கப்பூரில் ஊழியர் ஒரு வருக்கு 62 வயதாகும்போது அவ ருக்கு மறுநியமன ஒப்பந்தத்தின் பேரில் 67 வயது வரை வேலை கொடுக்கப்படுகிறது.
அரசு ஊழியர் 62 வயதுக்குப் பிறகு அதே வேலையில் இருந்தால் அதே சம்பளம்
1 mins read

