இவ்வாண்டு ஜனவரியில் இருந்து தேசிய சேவையைத் தொடங்கும் முழுநேர தேசிய சேவையாளர்களில் 96 விழுக்காட்டுக்கும் அதிகமா னோர் ஆண்டுதோறும் ஊழிய ரணி திறன் தேர்ச்சித் (WSQ) திட்டத்தின்கீழ் நற்சான்று பெறு வார்கள். தேசிய சேவையின் மதிப்பை மேம்படுத்தி, தேசிய சேவையாளர் கள் படிப்பைத் தொடர அல்லது வேலைக்குச் செல்ல துணை புரி வது இதன் நோக்கம். பெரும்பாலான தேசிய சேவை யாளர்களுக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி உட்பட, சிங்கப் பூர் ஆயுதப்படை நடத்தும் 23 பயிற்சிகள் இப்போது WSQ திட் டத்தின்கீழ் நற்சான்று பெறும். WSQ திட்டம் என்பது முதலாளி களால் மதிக்கப்படும் திறன்களில் பயிற்சியளித்து நற்சான்றளிக்கும் தேசிய செயல்முறை என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. தேசிய சேவையின்போது, சேவையாளர்கள் அடையும் தலை மைத்துவ, தொழில்நுட்ப, நிபுணத் துவத் திறன்கள் தொழில்துறை களால் ஏற்கப்படும் நிபுணத்துவத் தரங்களை நிறைவேற்றுகின்றன என அங்கீகரிப்பது இதன் நோக் கம் என்று தற்காப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத் தின்போது இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் விளக் கினார்.
ஆயுதப்படையின் 23 பயிற்சிகளுக்கு ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்ட நற்சான்று
1 mins read

