அண்டை வீட்டாரைத் தாக்கி காயம் ஏற்படுத்திய 82 வயது முதியவருக்கு 2 வாரச் சிறை

அண்டை வீட்டாரைத் தாக்கி காயம் ஏற்படுத்திய 82 வயது முதியவருக்கு 2 வாரச் சிறை

1 mins read

அண்டை வீட்டாரை அடித்துக் காயம் ஏற்படுத்திய முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. பெ ஸ்வீ டோங் என்ற 82 வயது முதியவர், ஹவ்காங் சென்ட் ரல், புளோக் 804ல் கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அண்டை வீட்டாரைத் தாக்கி, காயம் ஏற்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதி மன்ற விசாரணையில் ஒத்துக் கொண்டார். குமாரி லீ லாய் சோ, 51, முதி- யவர் பெ ஸ்வீயின் பக்கத்து வீட்டில் குடிவந்த நாளில் இருந்து இருவருக்கும் இடையே பல தகராறுகள் ஏற்பட்டன. வாய்ச் சண்டையில் இருந்து வந்த தகராறு இந்த முறை அடிதடி என்று போய்விட் டது.