அங் மோ கியோ அவென்யூ 10ல் நேற்று நடந்த 'முதியோரைப் போற்றி உதவுவோம்' என்ற ஒரு புதிய நிகழ்ச்சியில் டெக் கீ வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 முதியவர்கள் இலவசமாக சிகை அலங்காரம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு நக அலங்காரமும் செய்யப்பட்டது. டெக் கீ சமூக மனமகிழ் மன்றமும் சிங்கப்பூர் அரிமா சங்கம், வெளிநாட் டுப் பணிப்பெண்கள் சங்கம் ஆகிய தொண்டூழிய நல்வாழ்வு அமைப்பு களும் சேர்ந்து ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், தங்களுக்குப் பணமும் மிச்சமாகியது, நிகழ்ச்சி மிகவும் உதவியதாகவும் இருந்தது என்று கூறினார்கள். சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் சங்கத் தைச் சேர்ந்த பணிப்பெண்கள் இசை நிகழ்ச்சியும் நடத்தி முதியோர்களை மகிழ்வித்தார்கள்.
டெக் கீயில் முதியோருக்குச் சிறப்பு
1 mins read
-

