50 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

50 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

1 mins read
24fd896c-87a2-41fd-a462-88712d98ef82
-

வேலைக்கு ஆள்சேர்க்கும்போது சிங்கப்பூரர்களுக்கு நியாயமான வாய்ப்பை அளிக்கத் தவறிய 50 நிறுவ னங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று தெரிவித்தார். இந்த முதலாளிகள் செய்த 500க்கும் மேலான வேலை அனு மதி அட்டை விண்ணப்பங்களை மனிதவள அமைச்சு நிராகரித்தது அல்லது நிறுவனங்கள் மீட்டுக் கொண்டன என்று தனது அமைச் சின் வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதத்தின்போது அவர் கூறி னார். சிங்கப்பூரர்களை வேலைக்குச் சேர்க்கவும் வேலைக்குத் தயார்ப் படுத்தவும் போதிய முயற்சி எடுக் காத நிறுவனங்களைக் கண்கா ணிப்பதற்காகச் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட நியாயப் பரிசீ லனை சட்டமைப்பின் கண்காணிப் புப் பட்டியலில் இடம்பெறும் ஒத் துழைப்பு தராத நிறுவனங்களில் இவை உள்ளடங்கும்.

சிங்கப்பூரர்களை வேலைக்குச் சேர்க்கவும் வேலைக்குத் தயார்ப்படுத் தவும் போதிய முயற்சி எடுக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கோப்புப் படம்