மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் தொற்றால் சிங்கப்பூரில் உள்ள கோழிகளும் முட்டைகளும் பாதிப்படையவில்லை என்று வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அறிவித் துள்ளது. கிளந்தானிலிருந்து கோழி களும் முட்டைகளும் சிங்கப் பூருக்கு இறக்குமதி செய்யப் படாததே இதற்கு முக்கிய காரணம் என்று ஆணையம் நேற்று கூறியது. பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படாத ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக் ஆகிய மலேசிய மாநிலங்களிலிருந்து கோழிகளை யும் முட்டைகளையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டது.
'கோழிகள், முட்டைகள் பாதிக்கப்படவில்லை'
1 mins read

