நகர மன்றங்கள் குறித்த காலத்திற் குள் நிதிநிலை கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறுவதும் முரண் பாடுகளைப் பதிவு செய்யாதிருப்ப தும் கூடிய விரைவில் குற்றமாகக் கருதப்படவிருக்கிறது. மூன்று மணிநேர விவாதத் திற்குப் பிறகு நேற்று நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப் பட்ட பல்வேறு மாற்றங்களில் இவை உள்ளடங்கும். முரண்பாடுகளைத் தெரிவித்தல் தொடக்கமாக, நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப்பட்ட திருத் தங்களின்கீழ், நகர மன்ற உறுப் பினர்கள், ஊழியர்கள், நகர மன்ற குழு உறுப்பினர்கள், அல்லது நகர மன்றப் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டவர்கள் அனைவரும் முரண் பாடுகள் ஏதேனும் இருந்தால் தெரி யப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தப்படும் விவரங் களை நகர மன்றச் செயலாளர் பதிவேட்டில் பதிவு செய்து வைத் திருக்கவேண்டும்.
உயர் ஆளுமை தரங்களை கொண்ட நகர மன்ற மசோதா
1 mins read

