பொருளியல் நிலவரம் சரியில்லாத காரணத்தினால் தொல்லைகளை எதிர்நோக்கும் நிறுவனங்கள், காலத்திற்கு ஏற்ப உருமாறிக் கொள்வதை எளிதாக்கும் வகை யில் நிறுவனங்கள் சட்டத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளடக் கப்படும். பணநெருக்கடியை எதிர்நோக் கும் நிறுவனங்கள் நிலைமையைச் சமாளித்து தொடர்ந்து தொழில் நடத்தி வர தேவையான நீக்குப் போக்குகளை அந்த அம்சங்கள் நிறுவனங்களுக்கு வழங்கும். நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவை இரண்டாவது வாசிப்புக்கு முன்மொழிந்து அவர் பேசினார்.
நிறுவனங்கள் கடன் அடைப்பதை எளிதாக்க சட்டத்தில் மாற்றங்கள்
1 mins read

