உட்லண்ட்ஸை நோக்கிச் செல் லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்ததால், மோட்டார் சைக்கிளோட்டிகள் பலர் சிலேத் தார் விரைவுச்சாலைக்கு இட்டுச் செல்லும் மேம்பாலச் சாலைக்குக் கீழ் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று அங்கு கூடியிருந்த சுமார் ஒன்பது மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது வேகமாக மோதியது. இச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 3.50 மணிக்குத் தகவல் அறிந்து அங்கு சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அங்கு காயமுற்றுக் கிடந்த மோட்டார் சைக்கிளோட்டிகளில் இருவரின் மரணத்தை உறுதி செய்தது.ளpட் விபத்தில் காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குப் பிற வாகன ஓட்டிகள் உதவிக் கரம் நீட்டுகின்றனர். படம்: ஃபேஸ்புக் கனக்ஸ்டாக்சி
விரைவுச்சாலை விபத்தில் இருவர் பலி
1 mins read
-

