வேலை விண்ணப்பங்களில் பொய், லஞ்சம்; சிவசுந்தரம் வீரமணி மீது 42 குற்றச்சாட்டுகள்

வேலை விண்ணப்பங்களில் பொய், லஞ்சம்; சிவசுந்தரம் வீரமணி மீது 42 குற்றச்சாட்டுகள்

1 mins read

வேலை அனுமதி விண்ணப்பங் களில் பொய்த் தகவல்களைத் தெரிவித்ததாகவும் தனது வெளி நாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் கோ லோவ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத் தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய நாட்டவரான சிவ சுந்தரம் வீரமணி, 37, என்பவர், தன் நிறுவனத்தின் சார்பில் 20 வெளிநாட்டு ஊழியர்களின் மாதச் சம்பளங்களை 2015 நவம்பர் மாதத்திற்கும் 2016 மார்ச் மாதத் திற்கும் இடையில் பொய்யாக அறி வித்தார் என்று அவர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டு கூறுகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் அவர் அந்த ஊழியர்களின் மாதச் சம்பளம் குறைந்தபட்சம் $4,800 என்று விண்ணப்பத்தில் தெரிவித்தார்.