தாய்லாந்தைச் சேர்ந்த சுகன்யா பிரபுத்தா, 43, என்ற பெண்மணி தன்னுடன் சேர்ந்து வசித்து வந்த தன்னுடைய காதலனைத் தாக்கி அவரை மிதித்துக் கொன்றுவிட்டார். நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றத்திற்காக அந்த மாதுக்கு நேற்று ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசி யான அந்த மாது, 2015 மார்ச் 1ஆம் தேதி அதிகாலை நேரத்தில், நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஓர் அடுக்குமாடி வீட்டில், லீ சதீஷ்குமார் கொலை: 4வது நபர் மீது குற்றச்சாட்டு யாங் பூ, 55, என்ற ஆடவரின் தலையின் இடதுபுறத்தில் தன் வலது காலால் மிதித்து அவரைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
காதலி மிதித்து கபாலம் நொறுங்கி காதலன் மரணம்
1 mins read

