மின்னிலக்க அடையாளம், மின்னிலக்கக் கட்டணம், தீவு முழுமைக்குமான கம்பி யில்லா உணர்கருவிக் கட்டமைப்பு போன்ற அறிவார்ந்த தேசத்திற்கான முயற்சிகள் வேகம் பெறுகின்றன. 'GovTech' எனப்படும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு வரும் மே 1ஆம் தேதி முதல் பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும். பொதுச் சேவையை மின்னி லக்கமயமாக்குவதற்காக சுமார் 1,800 தொழில்நுட்பத் திறனாளர்கள் 'GovTech' அமைப்பில் இடம்பெற்றுள்ளனர். இப்போது, தொடர்பு, தகவல் அமைச்சின்கீழ் ஒரு சட்டபூர்வ அமைப்பாக 'GovTech' இருந்து வருகிறது. நிதியமைச்சின் மின்னிலக்க அரசாங்க இயக்குநரகம், தொடர்பு, தகவல் அமைச் சின் அரசாங்கத் தொழில்நுட்பக் கொள்கைப் பிரிவு ஆகியவை அறிவார்ந்த தேச திட்ட அலுவலகத்துடன் இணைந்து, ஒரு புதிய 'அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம்' அமைக்கப்படும்.
அறிவார்ந்த தேசத்திற்கான முயற்சிகள் அதிவேகம்
1 mins read

