குப்பை வண்டியின் மேல் ஆடவர் உடல்

குப்பை வண்டியின் மேல் ஆடவர் உடல்

1 mins read

குப்பை அள்ளிச் செல்லும் வாக னம் மீது மாடியில் இருந்து ஓர் ஆடவரின் உடல் விழுந்துள்ளது. அதையறி யாத ஓட்டுநர், வாக னத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் தெம்பனிஸ் ஸ்திரீட் 42, புளோக் 450Fல் நேற்றுக் காலை 10.40 மணிக்கு நிகழ்ந்தது. சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறப்படும் திரு ஓங் என்பவர், வாகனத்தின் மீது உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு, வாகனத்தை விரட்டிக் கொண்டு ஓடி நிறுத்தினார். பேச்சுமூச்சற்றுக் கிடந்த 51 வயது ஆடவர், இறந்து விட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என போலிசாரால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.