வாகனங்களற்ற ஞாயிறாக மார்ச் 26

வாகனங்களற்ற ஞாயிறாக மார்ச் 26

1 mins read

மீண்டும் வாகனங்களற்ற ஞாயிற் றுக்கிழமை வரும் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய வர்த்தக வட்டாரம், தெலுக் ஆயர் பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 5.5 கி.மீ. தூரத்திற்கு வாக னப் போக்குவரத்து இருக்காது. அப்பகுதிகளில் இலவச சைக்கிள் ரிக்ஷா சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றை மேற்கொள்ள லாம். தெலுக் ஆயர் பகுதியில் குடும்ப உறுப்பினர்களாக, நண்பர் களாக பல்வேறு விளையாட்டுகளில் பங்குபெறலாம். வாகனங்களற்ற ஞாயிற்றுக்கிழமையை குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர் களுட னும் உற்சாகமாகக் கொண்டா ட அங்கு வருகை தருவோர், தரையில் விரித்து உட்காருவதற்கு தரைவிரிப்புகளை எடுத்துவரலாம். அங்கு இசையைக் கேட்டு ரசித்தவாறு தங்கள் உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கலாம்.