கேலாங்கில் பல துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் மார்ச் 26 வரை ஆறு நாட்கள் எடுத்த கூட்டு நடவடிக்கையில் 17 முதல் 65 வயது வரையிலான 53 ஆடவர்களும் 34 பெண் களும் கைது செய்யப்பட்டனர். பிடோக் போலிஸ் பிரிவு தலைமையில் சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய வற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த நடவடிக்கையை எடுத்தனர். கள்ள சிகரெட்டுகளைப் புழங்கியது, பாலியல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டது, சூதாடியது முதலான பல குற்றச்செயல்கள் தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
53 ஆடவர்கள், 34 பெண்கள் கைது
1 mins read

