பள்ளிக்கூட பிள்ளைகள்: பெற்றோருக்கு வசதி

பள்ளிக்கூட பிள்ளைகள்: பெற்றோருக்கு வசதி

1 mins read

தங்கள் பிள்ளைகளுக்குப் பள் ளிக்கூட கட்டணங்களைச் செலுத் துவது முதல் பள்ளிக்கூட நடவடிக் கைகளில் கலந்துகொள்ள பிள்ளைகளை அனுமதிப்பது வரை பல காரியங்களையும் பெற்றோர் வசதியாக கவனிக்க ஏதுவாக புதிய மின்னிலக்க வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. 'பேரண்ட்ஸ் கேட்வே' (Parents Gateway) என்று குறிப்பிடப்படும் அந்த மின்னிலக்கத் தளம் மூலம் பெற்றோர்கள் இதர பல காரி யங்களையும் வசதியாக கவனிக் கலாம். அரசாங்கத் துறையில் தொழில்நுட்ப உருமாற்றத்தைச் செய்வதற்காக அரசாங்க தொழில்நுட்ப முகவை என்ற அமைப்பு சென்ற அக்டோபரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது குடிமக்களுக்கு வசதியான பல நடவடிக்கைகள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.