தானியக்கப் பேருந்து 2020ல் அறிமுகம்

தானியக்கப் பேருந்து 2020ல் அறிமுகம்

1 mins read

தானாகவே இயங்கக்கூடிய, ஓட்டு நரில்லாப் பேருந்துகளை சிங்கப்பூர் 2020ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்த திட்டமிட்டிருக்கிறது. 'எஸ்டி கைனட்டிக்ஸ்' நிறு வனத்தின் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு இப்பேருந்துகளை அறிமுகம் செய்யும். இந்தக் குழுவில் 'ஏ ஸ்டார்' அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவ மைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப் பூர் தொழில்நுட்பக் கல்வி நிலையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தானியக்க வாகன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 40 பேர் அமரக்கூடிய இரு மின்பேருந்து களை 'எஸ்டி கைனட்டிக்ஸ்' நிறு வனம் உருவாக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.