குடிமைத் தற்காப்புப் படையினர் உதவியுடன் சுக பிரசவம்

குடிமைத் தற்காப்புப் படையினர் உதவியுடன் சுக பிரசவம்

1 mins read

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் மூன்று பேர், ஒரு வீட்டில் பிரசவம் பார்த்து உதவினர். பொறுப்பு அதிகாரி கிட்ஷன், மருத்துவ ஊழியர் களான ஷரிஃப் ரேமியா, சாமோ இக்பால் ஆகிய மூவரும் ஏபி113 என்ற மருத்துவ வண்டியில் வெள்ளிக்கிழமை வந்ததாகவும் மூவரும் அன்று காலை சுமார் 8.15 மணிக்குத் தங்கள் வீட்டில் பிரசவம் பார்த்து உதவியதாகவும் கியான் ஹோ என்பவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். இது தங்க ளுக்கு இரண்டாவது குழந்தை என்றும் ஆண் குழந்தை என்றும் அவர் குறிப்பிட்டார். "அந்த மருத்துவக் குழுவுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். அதை ஃபேஸ்புக் வழியாக செய்கிறேன்." என்று அவர் தெரிவித்தார். இத்தகைய அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளையோ பரிசுகளையோ கொடுப்பதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுமதிப்பதில்லை.