பிரதமர் லீ: அமைச்சரவையில் அடுத்த ஆண்டு மேலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்

பிரதமர் லீ: அமைச்சரவையில் அடுத்த ஆண்டு மேலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்

1 mins read

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க மணிலாவுக்குச் சென் றிருந்த பிரதமர் லீ சியன் லூங், அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் பற்றி சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் நேற்று கருத்துரைத்தார். முழு அமைச்சர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருவாட்டி ஜோசஃபின் டியோவுக்கும் திரு டெஸ்மண்ட் லீக்கும் தனி அமைச்சு பொறுப்பு கொடுக்காமல் ஏன் இருவரையும் இரண்டாம் அமைச்சர்களாக்கியதுடன் பிரத மர் அலுவலக அமைச்சர்கள் பொறுப்பு கொடுக்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டது. "திறமையான அமைச்சர்க ளுக்கு நான் பதவி உயர்வு அளித் துள்ளேன். அவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்று நடத்தும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார் கள். அவர்கள் இது வரை சிறப்பா கப் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கி றேன்.