ஓடும் ரயிலில் முப்பது நிமிட நேரத்தில் மூன்று மாதர்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 56 வயது ஆடவரை கோவன் எம்ஆர்டி நிலையத்தில் போலிஸ் கைது செய்தது. கைதான சந்தேகப் பேர்வழி, தான் குடித்து இருந்ததாகக் கூறினார் என்று தெரிகிறது. ரயிலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்த அந்த ஆடவர் திடீரென்று தன் கையைப் பிடித்ததாகப் பாதிக்கப்பட்ட மாது ஒருவர் சொன்னார். அதேபோல் வேறு இரண்டு பெண்களும் அந்த ஆடவர் தங்களைத் தொடையில் தொட்டதாகக் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசுடன் தொடர்பு கொண்டனர். இதற்கு அங்கு இருந்த பலரும் உதவினர். புலன்விசாரணை தொடர்வ தாக போலிஸ் தெரிவித்து உள்ளது.
மானபங்கம்: ஆடவர் கைது
1 mins read

