கொலை முயற்சி: ஆஸி.யில் சிங்கப்பூரர் கைது

கொலை முயற்சி: ஆஸி.யில் சிங்கப்பூரர் கைது

1 mins read

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் மாது ஒருவரைக் கொலை செய்ய முயன்ற 30 வயது சிங்கப்பூரர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்ற அந்த ஆடவர், கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஆஸ்திரேலிய போலிசாரால் தேடப்பட்டார். பெயர் வெளியிடப்படாத அந்த ஆடவர், 20 வயது பெண்ணின் தலையில் சுத்தியலால் தாக்கியதுடன் கத்தியால் பலமுறை குத்தியதாகவும் குவீன்ஸ்லாந்து போலிஸ் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது. அந்த பெண்ணின் மண்டை ஓட்டில் முறிவும் அவரது தோற்பட்டையில் வெட்டுக் காயமும் இருந்ததாகக் கூறப் படுகிறது.