செயலி மூலம் புதிய 'கிராப்' கட்டண முறை வசதி சாத்தியம்

செயலி மூலம் புதிய 'கிராப்' கட்டண முறை வசதி சாத்தியம்

1 mins read
ece03b60-b30f-4f6d-9952-6de9e613123c
-

சாலையோரத்தில் டாக்சிகளை நிறுத்தி ஏறும் பயணிகள் இனி ஒரு செயலியின் உதவியுடன் அதனைச் செய்ய முடியும். தனியார் வாடகை கார் நிறுவனமான 'கிராப்', ஜகார்த்தாவில் 'கிராப்நாவ்' எனும் இந்தப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சாலையோரத்தில் டாக்சிகளை நிறுத்தி பயணத்திற்கான கட்டணங்களை 'கிராப்' செயலி மூலமாக செலுத்த முடியும். மேலும், ஒரே கட்டண முறையிலும் சிறப்புச் சலுகையிலும் பயணிகள் பலனடையலாம். இந்தச் சேவையை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.