'மனநலப் பிரச்சினை பற்றி பேசுங்கள்'

1 mins read

மனநலப் பிரச்சினை பற்றி தயங்காமல் பேசுங்கள் என்று பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி சிங்கப்பூர் இளையர்களிடம் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதரது இல்லத்தில் ஆறு இளைய ஆலோசகர்களிடம் அவர் பேசினார். "சமூக ஊடகம், இணையம் ஆகியவை மூலம் பல பொய்யான விஷயங்கள் இளையர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அவை அனைவரது வாழ்க்கையும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்து கின்றன," என்றார் இளவரசர் ஹேரி. இளவரசருடன் பேசிய இளம் ஆலோசகர்கள் முன்பு மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். தற்போது மற்றவர்களுக்கு மனநலம் குறித்து உதவி செய்து வருகின்றனர்.