சந்தித்த ஒரு மணி நேரத்திலே 19 வயது பதின்ம வயது தாயாரை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 27 வயது டிரக் ஓட்டுநருக்கு நேற்று 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முகமது இஸ் கந்தர் இஸ்மாயிலுக்கு 24 பிரம்படி களும் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி காலை பத்து மணியளவில் தமது வீட்டுக்குத் திரும்பிக் கொண் டிருந்த பெண், பீர் குடித்துக் கொண்டிருந்த முகமது இஸ் கந்தரை வழியில் சந்தித்தார். இருவரும் தங்களுடைய கைபேசி எண்களை பரிமாறிக் கொண் டனர். சிறிது நேரத்தில் 'வாட்ஸ் அப்' மூலம் அந்தப்பெண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
டிரக் ஓட்டுநருக்கு 16 ஆண்டுகள் சிறை
1 mins read

